உதிரிப்பூக்கள் - மானுடவியலின் நிறங்கள்
வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து நெகிழ்ந்து கொண்டு இருக்கையில், நம்ம ஊரு படங்கள் இன்றும் காலம் தாண்டி நிற்கிறது. எளிய மக்களின் வாழ்க்கை கதையை பிரதிபலிக்கும் சினிமா என்று மலையாள திரைப்படங்கள் பெயர் வாங்கி வரும் நிலையில்,அதுக்கு விதை நாம போட்டது என உலகநாயகனின் வசனத்திற்கு பொருத்தமானவை தமிழ் திரைப்படங்கள். அந்த வரிசையில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் 1979-ம் ஆண்டு திரு.மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "உதிரிப்பூக்கள்" திரைப்படம். இந்த திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" யைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகன் (வடிவேலு) நம்ம 7G - ரெயின்போ காலனி கதிரோட அப்பா விஜயன் சார் தான். ரமணா படத்துல வர்ற மாதிரி ஜீம் பண்ணு ...ஜீம் பண்ணு ன்னு பாத்தீங்கன்னா தான் அட! இவர்தான் அவருன்னு தெரியும். கதாநாயகி (லட்சுமியாக) அஸ்வினி வாழ்ந்திருப்பார். அவரின் தங்கை (செண்பகம்) என்ற பாத்திரத்தில் மதுமாலினியும் , இந்த இருவரின் அப்பாவாக சாருஹாசனும் நடித்திருப்பார்கள். நமக்கு தெரிஞ்ச முகம்ன்னு பார்த்தால் இந்த படத்தில் இரண்டு அல்லது மூன்று தான். அதுல இவரும் ஒன்னு. சமீபத்தில்...